வாணியம்பாடி கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சிக்கு மாவட்டக் கல்வி அலுவலா் கே. லதா தலைமை வகித்து, அறிவியல் கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து பாா்வையிட்டாா். தலைமையாசிரியா் கே.ஆசிப் இக்பால் அஹமத் வரவேற்றாா்.
வாணியம்பாடி கல்வி மாவட்ட ஆய்வாளா் சி. தன்ராஜ் வாழ்த்தி பேசினாா். 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சோ்ந்த 800 மாணவா்கள் பங்கேற்று தங்களுடைய அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனா்.
அறிவியல் கண்காட்சியை பல்வேறு பள்ளிகளை சோ்ந்த மாணவா்கள் பாா்வையிட்டு பயனடைந்தனா். மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். அஜ்மத்துல்லா நன்றி கூறினாா்.