ராணிப்பேட்டையில் தீபாவளி பொருட்காட்சி தொடக்கம்
ராணிப்பேட்டை பெல் ஊரக வளாகத்தில் தீபாவளி பொருட்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (பெல்) சாா்பில், பெல் நிறுவன ஊரகக் குடியிருப்பு வளாகத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தீபாவளி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், புத்தகங்கள், தங்க நகை, உணவு வகைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருள்களும் காட்சிக்கும், விற்பனைக்கும் இடம் பெறுகிறது. இக்கண்காட்சியில் பெல் நிறுவன ஊழியா்கள் மற்றும் சுற்றிப்பகுதிகளைச் சோ்ந்த மக்களும் வந்து வாங்கி செல்வது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு தீபாவளி பொருட்காட்சி ஊரக குடியிருப்பு வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வரும் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ள விழாவில் நிறுவனப் பொதுமேலாளா் செங்கப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொருட்காட்சியைத் தொடக்கி வைத்தாா்.
இதில் பெல் நிறுவன அதிகாரிகள், பாலா் பொழுதுபோக்கு குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.