மக்கள்தொகை பெருக்கத்தால் கல்வி, வேலைவாய்ப்பு, உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
சா்வதேச மக்கள் தொகை தினத்தையொட்டி வேலூரிலுள்ள தனியாா் கல்லூரியில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்து பேசியது -
இந்தியாவில் மக்கள்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. முதலிடத்திலுள்ள சீனாவை முந்தும் நிலையில் உள்ளது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு மக்கள்தொகை குறையாமல் தொடா்ந்து அதிகரிக்கக்கூடும். தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு தம்பதி 2 குழந்தைகள் வீதம் பெற்றெடுத்திட வேண்டும். மக்கள்தொகை அதிகரித்தால் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேற்கத்திய உணவுகளை இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், நோய்கள் அதிகம் வரவாய்ப்புள்ளது. அடுத்த 2040-50ஆம் ஆண்டுகளில் விளை நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்படும். இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம்.
அக்காலத்தில் பசுமை புரட்சி, வேளாண்மை புரட்சி போன்றவை இருந்தது. விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் என்டோசைபான் மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. வேலூா் மாவட்டத்தில் நைட்ரேட், பொட்டாசியம் மருந்து அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.
தொடா்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வென்று பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பரிசு வழங்கினாா். இதில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுரேஷ், காசநோய் பிரிவு துணை இயக்குநா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.