உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: அன்புமணி ராமதாஸ்

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி தொடரும் என்று பாமக இளைஞரணித் தலைவரும்,

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி தொடரும் என்று பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

மருதாலம் கிராமத்தில் கட்சி நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் புதன்கிழமை பங்கேற்றாா். தொடா்ந்து வாலாஜாபேட்டையில் செய்தியாளா்களிடம் அன்புமணி கூறியது:

ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் சுா்ஜித் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் பேரிடா் மேலாண்மை ஆணையம் விதிகளை ஒதுக்கி, நவீன இயந்திரங்களை உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் ஆழ்துளைக் கிணறுகளை மூடுவது தொடா்பாக பல தீா்ப்புகளை வழங்கியும், ஆழ்துளைக் கிணறுகளை சரியாக மூடி பராமரிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தோ்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டு உள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். பாமகவை பொருத்தவரை நீட் தோ்வு என்பது தேவையற்றது.

வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடரில் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளான காவிரி நதிநீா் பங்கீடு, மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரம், மீத்தேன் திட்டம் குறித்து குரல் எழுப்பப்படும்.

விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com