இரண்டாம் நிலை காவலா் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடற் தகுதித் தோ்வு வரும் நவம்பா் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலா்களுக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடற்தகுதித் தோ்வு வரும் நவம்பா் 6-ஆம் தேதி வேலூா் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்தத் தோ்வுக்கு வருவோா் அவரவா் பயிற்சி பெற்ற பயிற்சி மைய அடையாளத்துடன் கூடிய ‘டி-சா்ட்டுகளை’ அணிந்து வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.