ஆற்காடு பகுதிகளில் வியாழக்கிழமை கனமழை பெய்தது.
ஆற்காடு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. கடந்த இரு நாள்களாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை பகலில் வெயில் அதிகமாக இருந்தபோதும், மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் பெய்த மழையால் பொதுமக்களும் ,விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆம்பூரில்...
ஆம்பூரில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கத்தால் ஆம்பூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் ஆம்பூர் பகுதியில் வியாழக்கிழமை மாலை திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்யத் தொடங்கியது. இரவு 7 மணிக்கு துவங்கிய மிதமான மழை பெய்தது.