சாலை விதிகளை மீறியதாக தெலங்கானா மாநில நிலவளத் துறை முதன்மை ஆணையருக்கு ரூ. 7,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தெலங்கானா மாநில நிலவளத்துறை முதன்மை ஆணையர் அலுவல் ரீதியான அரசு காரை கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு முறையும், 2018-ஆம் ஆண்டில் ஐந்து முறையும் சாலை விதிகளை மீறி ஓட்டிச் செல்லப்பட்டது மற்றும் அனுமதி இல்லாத இடத்தில் நிறுத்தியது, ஆபத்தான வகையில் ஓட்டிச் சென்றது ஆகிய குற்றங்களுக்காக ஹைதராபாத் போக்குவரத்து போலீஸார், ரூ. 7,000 அபராதம் விதித்து புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.