தமிழ்நாடு கார் மற்றும் கனரக வாகன வியாபாரிகள்,ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ராணிப்பேட்டை மாவட்ட மோட்டார் வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் சங்கத்தின் தொடக்க விழா ராணிப்பேட்டை கே.பி.எஸ்.மகாலில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட கௌரவத் தலைவர் எம்.எஸ்.மாதவன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் ஆர்.ரமேஷ்குமார், மாவட்டத் தலைவர் வி.சபாபதி, செயலர் ஜி.செல்வம், பொருளாளர் எச்.எஸ்.கலீல், துணைத் தலைவர் ஏ.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாநில கூட்டமைப்பு மாநிலத் தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான பி.என்.சிவகுமார் சங்கத்தை தொடக்கி வைத்தார். இந்த விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் அ.முகமதுஜான் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, விபத்துக் காப்பீட்டுச் சான்றிதழ் வழங்கிப் பேசினார். மாநில பொதுச்செயலாளர் ஏ.காஜா முகமது, மாநிலப் பொருளாளர் எம்.கே.சின்னசாமி, மாநில முதன்மை துணைத் தலைவர் பாலமயில்வாகனன், மாநில முதன்மைச் செயலர் ஆர்.முகமது இக்பால், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.எம்.சுகுமார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.