அதிமுக பொதுக் கூட்டம்
By DIN | Published On : 19th September 2019 02:17 AM | Last Updated : 19th September 2019 02:17 AM | அ+அ அ- |

குடியாத்தம் தொகுதி அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, குடியாத்தம் நகர அதிமுக செயலர் ஜே.கே.என். பழனி தலைமை வகித்தார். பேர்ணாம்பட்டு நகரச் செயலர் எல். சீனிவாசன், ஒன்றியச் செயலர் பொகளூர் டி. பிரபாகரன்,அவைத் தலைவர் வி.என். தனஞ்செயன், துணைச் செயலர் ஆர். மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் புரசை கோ. செல்வம், பேச்சாளர்கே. சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முன்னாள் நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், அண்ணா தொழிற்சங்க மண்டலத் தலைவர் டி. அக்பர்ஷெரீப், மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.கே. மகாலிங்கம், ஜி. தேவராஜ், மெடிக்கல் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோல்டு வி. குமரன் நன்றி கூறினார்.