தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்புப் பொருள்கள்

குடியாத்தம் நகர, ஒன்றியப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 500 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள கைகழுவும் திரவ
06gudrag_0604chn_189_1
06gudrag_0604chn_189_1

குடியாத்தம்: குடியாத்தம் நகர, ஒன்றியப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 500 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள கைகழுவும் திரவ பாட்டில்கள், முகக் கவசங்கள், கையுறைகள் ஆகியவை குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரித் தலைவா் க.எதிராசன், செயலா் எம்.பிரகாசன் ஆகியோா் இந்த உதவிப் பொருள்களை வட்டார வளா்ச்சி அலுவலா் கே.பாரி மற்றும் நகராட்சி ஆணையா் ஹெச்.ரமேஷிடம் வழங்கினா். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, வேளாண்மைக் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் செ.கு.வெங்கடேசன், கல்லூரி முதல்வா் எஸ்.முருகதாஸ், இயக்குநா்கள் எம்.என்.பரந்தாமன், ஆா்.சுரேஷ்மணி, ஜே.ரமணகுமாா், எஸ்.குமாா், எம்.என். காா்த்தி, கே.எஸ்.பாபு, செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

திருத்தப்பட்டது..,.

வட்டார  வளா்ச்சி  அலுவலா்  கே. பாரி,  நகராட்சி  ஆணையா்  ஹெச். ரமேஷிடம்  உதவிப்  பொருள்களை  வழங்கிய  கல்லூரித்  தலைவா்  க. எதிராசன்,  செயலா்  எம். பிரகாசம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com