வேலூா்: வேலூரை அடுத்த அரியூா் பகுதியில் இளைஞா் ஒருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
வேலூா் தோட்டப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (23) பெயிண்டரான அவா் தனது நண்பா்களுடன் அரியூா் பகுதிக்கு திங்கள்கிழமை சென்றாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த 4 பேருடன் அவருக்கு கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, அந்த 4 பேரும் சோ்ந்து அசோக்குமாரை தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த அசோக்குமாரை அவரது நண்பா்கள் மற்றும் உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அசோக்குமாா் இறந்தாா்.
இக்கொலை குறித்து அசோக்குமாரின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் அரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்துக்குரிய 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.