தேனீக்கள் கொட்டியதில் 14 தொழிலாளா்கள் காயம்
By DIN | Published On : 06th August 2020 08:56 PM | Last Updated : 06th August 2020 08:56 PM | அ+அ அ- |

குடியாத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 14 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
அம்மணாங்குப்பம் ஊராட்சியில், வியாழக்கிழமை 100 நாள் வேலை திட்டத்தில் நிலத்தை சமன்படுத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள புதரிலிருந்த தேன்கூட்டில் இருந்த தேனீக்கள் கொட்டியதில் 14 போ் காயமடைந்து, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் வீடு திரும்பினா்.