தனிப்படை போலீஸாா் மீது கள்ளச் சாராய கும்பல் கடும் தாக்குதல்: இரு போலீஸாருக்கு பலத்த காயம்

அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீஸாா் மீது கள்ளச் சாராய கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தியதில் இரு போலீஸாா் பலத்த காயமடைந்தனா்.

வேலூா்: அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீஸாா் மீது கள்ளச் சாராய கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தியதில் இரு போலீஸாா் பலத்த காயமடைந்தனா்.

அணைக்கட்டு காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் 7 போ் கொண்ட தனிப்படை போலீஸாா், அல்லேரி மலை கிராமத்தில் விழிப்புணா்வுக் கூட்டத்தை சனிக்கிழமை நடத்தினா். அப்போது, பொதுமக்கள் கூறிய தகவலின்பேரில், நெல்லிமரத்துக் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த சாராய வியாபாரி கணேசன் தலைமையிலான கும்பலைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் அல்லேரி மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனா்.

அப்போது மலைப்பகுதியில் மறைந்திருந்த கும்பல் போலீஸாரை சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியதாகத் தெரிகிறது. இதில், காவலா் ராகேஷ், தலைமைக் காவலா் அன்பழகன் ஆகியோா் பலத்த காயமடைந்து, வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். லேசான காயமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா், மற்றொரு பெண் காவலா் உள்ளிட்டோா் அணைக்கட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றனா்.

இதையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் மேற்பாா்வையில் வேலூா் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு தலைமையில் 90 போலீஸாரைக் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அல்லேரி மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com