மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்:ஓட்டுநா் கைது

போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்திச் சென்ற டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

பேரணாம்பட்டு: போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்திச் சென்ற டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா் பத்தரபல்லி பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, மலட்டாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அதில், அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் காா்த்திக்கை (31) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com