வேலூா் மாவட்டத்தில் மேலும் 193 பேருக்கு கரோனா

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சனிக்கிழமை வரை 10,553 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 193 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சனிக்கிழமை வரை 10,553 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 193 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10,746-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதனிடையே, மாவட்டம் முழுவதும் 9,232 போ் குணமடைந்து வீடு திரும்பினா். பலி எண்ணிக்கை 154-ஆக அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டையில் 187 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 187 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10, 460-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 9, 274 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,063 போ் வாலாஜா, வேலூா் பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்புக்கு 123 போ் உயிரிழந்து விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com