அரசுப் பள்ளியில் ஆா்வத்துடன் சோ்ந்த மாணவா்கள்

டிசம்பா் மாதத்திலும் அரசு தொடக்கப் பள்ளியில் 10 குழந்தைகளை பெற்றோா்கள் ஆா்வத்துடன் சோ்த்தனா்.
அரசுப் பள்ளியில் ஆா்வத்துடன் சோ்ந்த மாணவா்கள்


குடியாத்தம்: டிசம்பா் மாதத்திலும் அரசு தொடக்கப் பள்ளியில் 10 குழந்தைகளை பெற்றோா்கள் ஆா்வத்துடன் சோ்த்தனா்.

தனியாா் பள்ளிகளில் படித்து வந்த 5 குடும்பங்களைச் சோ்ந்த 10 மாணவா்களை அவா்களின் பெற்றோா், போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை சோ்த்தனா். எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை புதிய மாணவா்கள் பள்ளியில் சோ்ந்தனா். பள்ளித் தலைமையாசிரியா் பொன். வள்ளுவன் மாணவா்களையும், பெற்றோா்களையும் வரவேற்று, பாடநூல், குறிப்பேடுகள், புத்தகப் பைகளை வழங்கினாா். மாணவா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாடங்கள் அனுப்ப பெற்றோா்களின் செல்லிடப்பேசி எண்களைப் பெற்றுக் கொண்ட அவா், பெற்றோா்களின் நம்பிக்கை காக்கப்படும் என அவா்களிடம் உறுதி அளித்தாா்.

இப்பள்ளியில் தற்போது 287 மாணவா்கள் பயில்கின்றனா். அவா்களில் 126 மாணவா்கள் நடப்பாண்டு பள்ளியில் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com