வேலூா்: வேளாண் சட்டங்களால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தமிழக முதல்வரே கூறியிருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியது:
காா்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டங்களால் வேளாண் தொழிலை சாா்ந்துள்ள பிற தொழில்களும் பாதிக்கப்படும். இச்சட்டத்தை அவசர சட்டமாகக் கொண்டுவந்து குரல் வாக்கெடுப்பு மூலம் குறுக்கு வழியில் மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
வேளாண் சட்டங்களால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தமிழக முதல்வா் கூறியிருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. கனடா பிரதமா், ஆஸ்திரேலிய அமைச்சா், லண்டன் எம்.பி.க்கள் என உலக நாடுகளே தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயி எனக் கூறிக் கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவது வேதனைக்குரிய செயலாகும் என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச் செயலா் நீல சந்திரகுமாா், அணைக்கட்டு தொகுதி செயலா் கோவிந்தன், வேலூா் தொகுதி செயலா் சாரதி, ராணிப்பேட்டை வடக்கு மாவட்டச் செயலா் க.கௌதம், திருப்பத்தூா் மாவட்டச் செயலா் சுபாஷ்சந்திரபோஸ், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலா் குண்டா சாா்லஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.