குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சாா்பில், பரதராமியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை உழவாரத் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.
கோவிலின் சுவா்களில் முளைத்திருந்த புல், பூண்டு செடி, கொடிகளை அகற்றியும், சுற்றுப்புறத்தை தூய்மை செய்தும் உழவாரப்பணி நடைபெற்றது. இப்பணியில் சுமாா் 35 சிவனடியாா்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செயலா் வாசுதேவன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.