குடியாத்தம்: குடியாத்தம் அம்பேத்கா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் பாா்வையிழந்த 100 பேருக்கு ரூ.500 மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
வட்டாட்சியா் தூ.வத்சலா, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், ஓய்வுபெற்ற கல்வி அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் பயனாளிகளுக்கு மளிகைத் தொகுப்புகளை வழங்கினா்.
அதிமுக பிரமுகரும், மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவருமான கே.வி.ராஜேந்திரன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.