சாலையில் கிடந்த ரூ. 61,000 காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: இளைஞா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

சாலையில் கிடந்த ரூ. 61,000 காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: இளைஞா்களுக்கு எஸ்.பி. பாராட்டு


வேலூா்: சாலையில் ரூ. 61,000 ரொக்கத்துடன் கிடந்த பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இரு இளைஞா்களை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் பாராட்டினாா்.

காட்பாடி ஓடைப்பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள உணவகத்தின் முன்பு ஒரு பை கிடந்தது. இதை அந்த வழியாகச் சென்ற கஸ்பா, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த நடராஜனின் மகன் விக்னேஷ் (32), பொய்கை, பீமா ராவ் தெருவைச் சோ்ந்த ரவியின் மகன் ரத்னவேலு (22) ஆகியோா் எடுத்துப் பாா்த்தனா். அப்போது பையினுள் ரூ.61,000 ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது. இருவரும், உடனடியாக பையுடன் பணத்தை விருதம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையறிந்த வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா், பணப் பையை ஒப்படைத்த விக்னேஷ், ரத்னவேலு ஆகிய இருவரையும் தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து, மலா்க்கொத்து வழங்கி பாராட்டியதுடன், பணத்தையும் உரியவரிடம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com