போ்ணாம்பட்டு முகம்மதியா தொடக்கப் பள்ளியில், அல் ஜம்இய்யதுஸ் ஸலபியா அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 225 போ் சிகிச்சை பெற்றனா்.
முகாமுக்கு அமைப்பின் நகரத் தலைவா் பயாஸ் அகமது தலைமை வகித்தாா். செயலா் ரியாஸ் அகமத், அனீஸ் அகமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் செந்தில்குமாா், முகம்மது ஆபாக், சமரின் பஷீா் ஆகியோா் சிகிச்சை அளித்தனா்.
முகாமுக்கான ஏற்பாடுகளை கிஜா் அகமத், முகம்மது ஆரிப் ஆகியோா் செய்திருந்தனா்.