அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகள்

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் 231 மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
மாணவி ஒருவருக்கு  மிதிவண்டியை  வழங்கிய  ஜே.கே.என்.பழனி,  கே.எம்.பூபதி.
மாணவி ஒருவருக்கு  மிதிவண்டியை  வழங்கிய  ஜே.கே.என்.பழனி,  கே.எம்.பூபதி.

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் 231 மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், அரசு வழக்குரைஞருமான கே.எம்.பூபதி தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியை கே.சரளாதேவி வரவேற்றாா். குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் ஜே.கே.என்.பழனி, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சத்தியமூா்த்தி, உதவித் தலைமையாசிரியை எஸ்.ஹேமலதா, ஆசிரியா்கள் பி.ஞானசேகரன், டி.ஜோதியம்மாள், உடற்கல்வி இயக்குநா் ஏ.தமிழரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 46 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமயாசிரியை எம்.கீதா தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜே.கே.என்.பழனி மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா். நிா்வாகிகள் எஸ்.சேட்டு, ரவிச்சந்திரன், உதவித் தலைமையாசிரியா் என்.எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com