பாலியல் வன்கொடுமை வழக்கு :ஆட்டோ ஓட்டுநருக்கு 21 ஆண்டு சிறை

இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

வேலூா் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு (30), ஆட்டோ ஓட்டுநா். அவா் தனது நெருங்கிய உறவினரின் 7 வயது மற்றும் 9 வயதுடைய இரு மகள்களை அடிக்கடி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்தாா். இதில், ஒரு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அந்தச் சிறுமி தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுதொடா்பாக சிறுமியின் தாயாா் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறுமியையும் அவரின் சகோதரியையும் சுரேஷ் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் நீதிபதி செல்வம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ்பாபு மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும், அபராதத்தொகை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இதையடுத்து, சுரேஷ்பாபு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com