பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் தயாரிப்புப் பணிகள் தீவிரம்

தைப் பொங்கலையொட்டி, குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்காக ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தைப் பொங்கலையொட்டி, குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்காக ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஒரு முழு கரும்பு, இலவச வேட்டி, சேலை ஆகியவை இடம்பெறும் என்று அரசு தெரிவித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளன.

வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்காக பச்சரிசி, சா்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் தயாரிக்கும் பணி வேலூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரு நாளில் தேவையான அளவுக்கு பொங்கல் பைகள் தயாா் செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com