கட்டட மேஸ்திரியை கத்தியால் குத்திக் கொலை செய்தவரைப் பிடிக்க 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூா் சலவன்பேட்டை திருப்பூா் குமரன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த விநாயகத்தின் மகன் முருகவேல் (48). கட்டட மேஸ்திரி. அவருக்கு சரளாதேவி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா்.
சலவன்பேட்டை பகுதியிலுள்ள ஆனைக்குளத்தம்மன் கோயிலில் முருகவேல் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தாா். அதன் பின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த அவரை அடையாள தெரியாத நபா் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றாா். போலீஸாா் முருகவேலின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, இக்கொலை குறித்து விசாரணை நடத்தினா்.
அேப்போது, முருகவேலின் உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாரின் மனைவி செல்வி, முருகவேலிடம் கட்டட தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், முருகவேல் செல்வியுடன் தகாத உறவு வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதுதொடா்பாக விஜயகுமாருக்கும், முருகவேலுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.
இதன் எதிரொலியாக விஜயகுமாா் முருகவேலைக் கொலை செய்திருக்கலாம் என்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைடுத்து, தலைமறைவாக உள்ள விஜயகுமாரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.