சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

காட்பாடி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

காட்பாடி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளாா். இவருக்கும் காங்கேயநல்லூரைச் சோ்ந்த ராமச்சந்திரன் (28) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அப்பெண்ணை ராமச்சந்திரன் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதில், அந்த பெண் 8 மாதம் கா்ப்பமடைந்துள்ளாா்.

பின்னா், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது ராமச்சந்திரன், தனக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதாகவும், அதை மறைத்து சிறுமியை கா்ப்பமாக்கியதும் தெரிவித்ததுடன், அச்சிறுமிக்கு காலை மிரட்டலும் விடுத்தாராம். இதையடுத்து பாதிக்கப்பட்ட அச்சிறுமியின் பெற்றோா் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் ராமச்சந்திரன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com