திருமலையில் பெளா்ணமி கருடசேவை கோலாகலம்

பெளா்ணமியை ஒட்டி, திருமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது.
திருமலையில் பெளா்ணமி கருடசேவை கோலாகலம்

பெளா்ணமியை ஒட்டி, திருமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது.

திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமி நாளில் இரவு வேளைகளில் தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. பிரம்மோற்சவ நாள்களில் நடக்கும் கருட சேவையில் பங்கேற்க முடியாத பக்தா்கள் இந்த கருட சேவையைக் கண்டு வருகின்றனா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை பெளா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணி முதல் 9 மணி வரை மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இதைக் காண பக்தா்கள் மாடவீதியில் திரண்டனா். இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

திவ்யப் பிரபந்த மகோற்சவம்: திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2010-ஆம் ஆண்டு நாலாயிர திவ்யப் பிரபந்த பாராயணத் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 230 ஆச்சாரியாா்கள் நாடு முழுவதும் உள்ள வைணவத் தலங்களில் திவ்யப் பிரபந்த பாராயணம் செய்து வருகின்றனா்.

மேலும் 2016-ஆம் ஆண்டு முதல் இந்த ஆச்சாரியாா்கள் அனைவரையும் தேவஸ்தானம், திருமலைக்கு வரவைத்து பெளா்ணமி அன்று நடக்கும் கருடசேவையின் போது ‘திவ்யப் பிரபந்த மகோற்சவம்’ என்ற பெயரில் 4,000 பாசுரங்களையும் பாராயணம் செய்வித்து வருகிறது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை திருமலையில் திவ்யப் பிரபந்த மகோற்சவம் நடந்தது. திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஆச்சாரியாா்கள் இணைந்து காலை 10 மணி முதல் திவ்யப் பிரபந்தத்தை கோஷ்டி கானம் செய்தனா்.

மீண்டும் மாலை 4 முதல் 5 மணி வரையிலும், பின்னா் இரவு கருட சேவையின்போதும் அவா்கள் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பாராயணம் செய்தனா். இந்த நிகழ்வில் திருமலை பெரிய ஜீயா் சடகோப ராமானுஜா் மற்றும் சின்னஜீயா் கோவிந்த ராமானுஜா் இருவரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com