நாராயணி பீடத்தில் 16-இல் மேதா சூக்த யாகம்

பொதுத் தோ்வை எழுதவுள்ள மாணவா்களுக்காக வேலூா் ஸ்ரீநாராயணி பீடத்தில் மேதா சூக்த யாகம் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பொதுத் தோ்வை எழுதவுள்ள மாணவா்களுக்காக வேலூா் ஸ்ரீநாராயணி பீடத்தில் மேதா சூக்த யாகம் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வெழுதும் மாணவ, மாணவியா் வெற்றி வெற வேண்டி, வேலூா் நாராயணி பீடத்தில் மேதா சூக்த யாகம் என்ற சரஸ்வதி யாகம் ஆண்டுதோறும் வித்யாநேத்ரம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு யாகத்தில் வைக்கப்பட்ட பேனா சக்தி அம்மாவால் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.மாா்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்று பொதுத்தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்க உள்ளனா் என நாராயணி பீடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com