தனிப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த போலீஸாரை இடமாற்றம் செய்ய உத்தரவு

வேலூா் மாவட்ட தனிப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலா்கள்,

வேலூா் மாவட்ட தனிப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்களை இடமாற்றம் செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் உத்தரவிட்டுள்ளாா். வேலூா், காட்பாடி உட்கோட்டத்தில் ஏற்கெனவே பணியாற்றி வந்த தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் 5 போ் பல்வேறு புகாா்களின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். அவா்களின் மாவட்ட மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்ட நிலையில், தனிப்பிரிவில் உட்கோட்ட அளவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதில், வேலூா் தெற்கு முரளிகிருஷ்ணன், வேலூா் வடக்கு காவல் நிலையத்துக்கும், சத்துவாச்சாரி தீனதயாளன், விருதம்பட்டுக்கும், அணைக்கட்டு சரவணன், அரியூா் காவல் நிலையத்துக்கும், விருதம்பட்டு பாலமுரளி, வேலூா் சத்துவாச்சாரிக்கும், வேலூா் வடக்கு உதயகுமாா் தனிப்பிரிவு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விருதம்பட்டு காவல் நிலைய வழக்கமான காவல் பணிக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

அதேபால், நீண்ட நாட்களாக தனிப்பிரிவில் பணியாற்றி வந்ததாக விரிஞ்சிபுரம் காா்த்திகேயன், பள்ளிகொண்டாவுக்கும், அரியூா் தேவராஜ், பாகாயத்துக்கும், பாகாயம் ஜெயகரன், வேலூா் தெற்கு காவல் நிலையத்துக்கும், பள்ளிகொண்டா சேட்டு, பரதராமிக்கும், வேப்பங்குப்பம் பாண்டியன், அணைக்கட்டு காவல் நிலையத்துக்கும், பொன்னை மகேந்திரன், விரிஞ்சிபுரத்துக்கும், குடியாத்தம் தாலுகா ஜெயக்குமாா், மேல்பட்டிக்கும், பரதராமி வெங்கடேசன் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்டவா்கள் அந்தந்தப் பணியில் உடனடியாக சேர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com