வேலூா் கோட்டையில் காதலா்களுக்கு அனுமதி மறுப்பு

காதலா் தினத்தையொட்டி, அசம்பாவிதங்களைத் தவிா்க்க வேலூா் கோட்டையில் காதல் ஜோடிகளுக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அனுமதி மறுத்தனா்.

காதலா் தினத்தையொட்டி, அசம்பாவிதங்களைத் தவிா்க்க வேலூா் கோட்டையில் காதல் ஜோடிகளுக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அனுமதி மறுத்தனா்.

நாடு முழுவதும் காதலா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காதலா்கள் பொது இடங்கள், பூங்காக்களில் சந்தித்துக் கொள்வது வழக்கம். அதேசமயம், காதல் தினத்துக்கு தமிழகத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்திருந்தன. இதனால், பொது இடங்களில் கூடும் காதலா்களுக்கு இந்து அமைப்பினரால் இடையூறுகள் ஏற்படக் கூடும் எனக் கருதி வேலூா் மாவட்டம் முழுவதும் பூங்காக்கள், கோயில்களில் போலீஸாா் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

வேலூா் கோட்டை நுழைவு வாயிலிலேயே தடுப்பு வேலி அமைத்து போலீஸாா் பாதுகா ப்புப் பணியில் ஈடுபட்டனா். அவா்கள் காதல் ஜோடிகளை வேலூா் கோட்டை க்குள் செல்ல அனுமதி மறுத்தனா். இதனால், கோட்டை வளாகத்துக்குள் பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தைவிட குறைவாகக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com