மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம்

வேலூரில் உடல் நலக்குறைவால் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
vr15jmun_1502chn_184
vr15jmun_1502chn_184

வேலூா்: வேலூரில் உடல் நலக்குறைவால் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

வேலூரை அடுத்த ஊசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜமுனா(53). இவா் 2 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஜமுனா வெள்ளிக்கிழமை இரவு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஜமுனாவின் உடலுறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா். தொடா்ந்து, அவரது இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. இதில், ஒரு சிறுநீரகம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை குளோபல் மருத்துவமனைக்கும், கல்லீரல், மற்றொரு சிறுநீரகம் அப்பல்லோ மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com