அரக்கோணம் ஆட்டுப்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சாா்பில் சமூக அறிவியலுக்கான புள்ளிவிவர தொகுப்பு, கருவிகள் பயன்பாடு குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
வணிகவியல் துறை தலைவா் க.குமாா் தலைமை வகித்தாா். முதல்வா் பாமா கருத்தரங்கைத் தொடக்கி வைத்தாா். வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியா் கோகுல், வணிகவியல் துறை பேராசிரியை ரா.சுகுமாரி, பேராசிரியா் ஜோதிகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாணவ, மாணவிகள் பங்கேற்று சமூக அறிவியலுக்கான புள்ளி விவரங்கள், அதன் கருவிகள் குறித்தும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.