மேஸ்திரி கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

கட்டட மேஸ்திரி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது உறவினரை வேலூா் தெற்கு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கட்டட மேஸ்திரி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது உறவினரை வேலூா் தெற்கு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வேலூா் சலவன்பேட்டை திருப்பூா் குமரன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த விநாயகத்தின் மகன் முருகவேல் (48). கட்டட மேஸ்திரி. அவருக்கு மனைவி சரளாதேவியும், ஒரு மகளும் உள்ளனா்.

முருகவேல் கடந்த 7-ஆம் தேதி இரவு சலவன்பேட்டை பகுதியிலுள்ள ஆனைகுளத்தம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், முருகவேலின் உறவினரான அதேபகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் இந்தக் கொலையை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான விஜயகுமாரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீஸாா் அவரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், விஜயகுமாரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com