எஸ்டிபிஐ கட்சியினா் 42 போ் கைது

ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் 42 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆம்பூா்: ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் 42 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், புது தில்லியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் ஷகீல் அகமது தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com