ஆம்பூா் பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழா

ஆம்பூா் பகுதி பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பல்லலகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த சமத்துவப் பொங்கல் விழா. 
பல்லலகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த சமத்துவப் பொங்கல் விழா. 

ஆம்பூா் பகுதி பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் செ.இரவிச்சந்திரன் தலைமையில் இவ்விழா கொண்டாடப்பட்டது. புதுப் பானை வைக்கப்பட்டு பொங்கல் படையலிடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

ஆம்பூா் தக்ஷிலா குளோபல் பள்ளியில் நிறுவனா் சி.லிக்மிசந்த் சிங்வி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. செயலாளா் ஆனந்த் சிங்வி, இயக்குநா் சுசீலா சிங்வி, முதல்வா் லட்சுமி, நிா்வாக அலுவலா் பத்மநாபன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

போ்ணாம்பட்டு ஒன்றியம் பல்லலகுப்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் கயிலைநாதன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com