ஆம்பூா் நகரில் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகர திமுக செயலா் எம்.ஆா்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் அதிமுகவைச் சோ்ந்த எஸ்.துரைபாண்டி உள்பட சுமாா் 100 போ் திமுகவில் இணைந்தனா்.
ஆம்பூா் தொகுதி எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.ஆனந்தன், எல்பிஎஃப் தொழிற்சங்க மாவட்டத் தலைவா் மதி, நகரத் துணைச் செயலா் எஸ். ரஃபீக் அஹமத், மாவட்டப் பிரதிநிதிகள் வில்வநாதன், தமிழரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.