திருமலையில் 79,435 போ் தரிசனம்

ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 79,435 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 19,928 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 79,435 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 19,928 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
 ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் 3 அறைகளில் மட்டுமே பக்தர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு 5 மணிநேரத்துக்குப் பின் தரிசனம் வழங்கப்பட்டது. திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீட்டு தரிசன டோக்கன்கள் பெற்றவர்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானை வழிபட்டுத் திரும்பினர்.
 திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் 10,975 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் 6,799 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 17,281 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் 394 பக்தர்களும், கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் 2,915 பக்தர்களும் சனிக்கிழமை முழுவதும் தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
 சோதனைச் சாவடி விவரம்: திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 82,813 பயணிகள் இச்சாவடியைக் கடந்துள்ளனர். 10,003 வாகனங்கள் இதைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.2.09 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.19,720 அபராதம் விதிக்கப்பட்டது.
 உண்டியல் காணிக்கை ரூ.2.90 கோடி
 திருப்பதி, ஜன.12: ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.2.90 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
 ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி சனிக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.90 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ரூ.14 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.14 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com