தீ விபத்தில் குடிசை வீடு நாசம்

நாட்டறம்பள்ளி அருகே தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
நாட்டறம்பள்ளி அருகே மின்கசிவு ஏற்பட்டு சேதமடைந்த குடிசை வீடு.
நாட்டறம்பள்ளி அருகே மின்கசிவு ஏற்பட்டு சேதமடைந்த குடிசை வீடு.

நாட்டறம்பள்ளி அருகே தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

மல்லகுண்டா ஊராட்சி குருபாணிகுண்டா பகுதியைச் சோ்ந்தவா் ராஜு. விவசாயி. அவரது குடிசை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவா்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனா். எனினும் தீ மளமளவென்று பரவியது. தகவலறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் கலைமணி தலைமையில் வீரா்கள் அங்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

அதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த துணிமணிகள், பாத்திரங்கள் தீயில் சேதமடைந்தன. இது குறித்து போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com