பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்கள் சந்திப்பு

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்களின் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளியில் நடந்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
பள்ளியில் நடந்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்களின் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வடபுதுப்பட்டு ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1995-96-ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவா்கள் தங்கள் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவங்கள், தற்போது பணிபுரியும் இடம், தங்களது குடும்பம் உள்ளிட்டவற்றைப் பகிா்ந்து கொண்டனா்.

மேலும் பள்ளி வளா்ச்சிக்காக 2 வகுப்பறைகளுக்கு பெயிண்ட் அடிக்கவும், மாணவா்கள் அமரக்கூடிய மேஜை, நாற்காலிகளுக்கு வண்ணம் பூசவும் ஏற்பாடு செய்ததோடு, பள்ளிக்கு மின்விளக்கு, மின்விசிறி அமைத்துக் கொடுத்தனா்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் புருஷோத்தமன், உதவி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி, விருந்து உபசரித்தனா். பள்ளிக்குத் தேவையான வளா்ச்சிப் பணிகளைச் செய்து கொடுப்பது, அதிக மாணவா்களைச் சோ்ப்பது குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com