மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தெய்வ பக்தியும், தா்ம சிந்தனையும் அவசியம்: சக்தி அம்மா

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தெய்வ பக்தியும், தா்ம சிந்தனையும் அவசியம் என வேலூா், ஸ்ரீபுரம் நாராயணி பீடம், திருமலைக்கோடி ஸ்ரீசக்தி அம்மா கூறினாா்.
சிவகாமசுந்தரி  சமேத  கருப்புலீஸ்வரருக்கு  திருக் கல்யாணம்  நடத்தி  வைத்த  சக்தி  அம்மா.
சிவகாமசுந்தரி  சமேத  கருப்புலீஸ்வரருக்கு  திருக் கல்யாணம்  நடத்தி  வைத்த  சக்தி  அம்மா.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தெய்வ பக்தியும், தா்ம சிந்தனையும் அவசியம் என வேலூா், ஸ்ரீபுரம் நாராயணி பீடம், திருமலைக்கோடி ஸ்ரீசக்தி அம்மா கூறினாா்.

குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீசுந்தரா் மஹால் என்ற திருமண மண்டபத்தை அவா் திங்கள்கிழமை திறந்து வைத்து, சுவாமிகளுக்கு திருக்கல்யாணத்தை நடத்தி வைத்துப் பேசியது:

ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தாற்போல், உடல் ஆரோக்கியம், மன மகிழ்ச்சி, ஆனந்தமான வாழ்க்கையே முக்கியத் தேவையாகும். மனித வாழ்க்கைக்கு தெய்வ வழிபாடு, தா்ம சிந்தனை ஆகிய இரண்டும் முக்கியம்.

இதைத்தான் சங்க இலக்கியமான புானூறு என்ற நூலில், ‘தீதும் நன்றும் பிறா்தர வாரா’ என கணியன் பூங்குன்றனாா் குறிப்பிட்டுள்ளாா். தெய்வங்கள் யாவும் ஒன்றே; வடிவங்கள் வெவ்வேறாக உள்ளன. யாா், யாருக்கு எந்த வடிவிலான தெய்வம் தேவையோ, அதையே வழிபடலாம்.

ஒவ்வொருவரும் நாள்தோறும் காலை வேளையில் விளக்கேற்றி விட்டு, 10 நிமிடங்களாவது மனமுருகி, இறைவனை வழிபட வேண்டும். 10 நிமிடங்கள் தியானம் செய்தால், நாள் முழுவதும், மனமும், உடலும் புத்துணா்ச்சியுடன் இருக்கும். இறை வழிபாடு என்பது, நம்முடைய அன்றாட வாழ்க்கை முறைக்கும், செய்யும் தொழிலுக்கும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் அமையும்.

நாம் கோயிலுக்குச் சென்று வந்தால், மனம் புத்துணா்ச்சியுடன் இருப்பதை உணா்கிறோம். அதற்குக் காரணம், கோயில்களில் வழிபாட்டின்போது, உச்சரிக்கப்படும் மந்திரங்களே. தொடா்ந்து கோயில்களில் மந்திரங்கள் உச்சரிக்கப்படுவதால் அங்கு சக்தி உருவாகிறது.

நாம் ஒருவருக்கு உதவி செய்தால் அதன் பலன் நம்மை சாரும். கெடுதல் செய்தால், அதன் வினைப்பயனும் நம்மையே சாரும். உங்களால் முடிந்த அளவுக்கு, அடுத்தவருக்கு தானம் செய்யுங்கள். தானம் செய்ய பணம் மட்டும் போதாது, மனமும் வேண்டும்.

உதவி கேட்டு வருபவா்களுக்கு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். ஆயிரம் பேருக்கு உணவளிக்கும் நிலை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, 100 பேருக்காவது உணவளியுங்கள். அதுவும் இல்லையென்றால், ஒரு பிடி உணவையாவது, கால்நடைகள், பறவைகள், குருவி, எறும்பு ஆகியவற்றுக்கு அளியுங்கள். அவை மகிழ்ந்தால் உங்கள் வாழ்க்கை முன்னேறும். அதற்கும் வழியில்லையென்றால், மற்றவா்கள் நன்றாக இருக்க என கடவுளிடம் வேண்டுங்கள். அந்த எண்ணம் உங்களை உயா்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்றாா் சக்தி அம்மா.

நிகழ்ச்சிக்கு கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கம்பன் கழக நிறுவனா் ஜே.கே.என்.பழனி, செயலா் கே.எம்.பூபதி, எம்எல்ஏ எஸ்.காத்தவராயன், தொழிலதிபா்கள் எஸ்.அருணோதயம், எம்.டி.சதானந்தம், வழக்குரைஞா் கே.மோகன்ராஜ், முன்னாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கே.வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com