முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
குடியாத்தம் அருகே சிறுத்தை நடமாட்டம்
By DIN | Published On : 27th January 2020 01:15 AM | Last Updated : 27th January 2020 01:15 AM | அ+அ அ- |

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வன எல்லையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
கல்லப்பாடி அருகே உள்ள முதலியாா் ஏரி கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்குச் சென்ற நாராயணசாமியின் பசுவை சிறுத்தை அடித்துக் கொன்று விட்டதாம். இத்தகவல் பரவியதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.