ஆம்பூா்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆம்பூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பாக மனித சங்கிலிப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நேதாஜி சாலையில் நடந்த இப்போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளா் அ.அஸ்லம் பாஷா, ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம், தமுமுக மாவட்டத் தலைவா் வி.ஆா்.நசீா் அகமது, காங்கிரஸ் சாா்பாக சமியுல்லா, அா்ஷத், மதிமுக, தவ்ஹீத் ஜமாஅத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினா் கலந்து கொண்டனா்.