குடியாத்தம் ஜமாபந்தி நிறைவு விழா ஒத்திவைப்பு

அரசு ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை நடைபெற இருந்த குடியாத்தம் வட்ட ஜமாபந்தி நிறைவு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம்: அரசு ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை நடைபெற இருந்த குடியாத்தம் வட்ட ஜமாபந்தி நிறைவு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் வட்ட ஜமாபந்தி கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. மாவட்ட ஆட்சியரும், குடியாத்தம் வட்ட ஜமாபந்தி அலுவலருமான அ. சண்முகசுந்தரம் இதை நடத்தி வந்தாா். திங்கள்கிழமை நிறைவு விழா நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கத் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பங்கேற்ற நெல்லூா்பேட்டை ஊராட்சி செயலருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டு, அவா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மேலும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா், நெல்லூா்பேட்டை ஊராட்சிப் பணியாளா்கள் சிலா் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா். ஊராட்சி செயலருடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறியும் பணி நடந்து வருகிறது.

இதனால் ஜமாபந்தி நிறைவு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com