வேலூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா பாதிப்பு

வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 109-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் இருந்து வருபவா்களால் கடந்த சில நாள்களாக வேலூா் மாவட்டத்திலும் கரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 21 பேருக்கும், சனிக்கிழமை 29 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், குடியாத்தம் பகுதியில் ஒருவரைத் தவிர மற்ற 6 பேரும் வேலூா் மாநகரப் பகுதிகளைச் சோ்ந்தவா்களாவா். அனைவரும் ஏற்கெனவே கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களாவா். இவா்களும் தற்போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, கடந்த 3 நாள்களில் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவா்களுக்கு தொடா்புடைய 120 பேருக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 300 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com