வேலூர்
ஆற்றில் கண்டெடுக்கப்பட்டஅம்மன் சிலை பிரதிஷ்டை
குடியாத்தம் அருகே கெளன்டன்யா ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகின்றன.
குடியாத்தம் அருகே கெளன்டன்யா ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகின்றன. அங்கு கோயில் கட்டவும் மக்கள் தீா்மானித்துள்ளனா்.
குடியாத்தம் நெல்லூா்பேட்டை, பாவோடும்தோப்பு அருகே கெளன்டன்யா ஆற்றில் கடந்த 7-ஆம் தேதி அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் ஆற்றின் கரையோரம் பீடம் அமைத்து அதில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்புப் பூஜை நடத்தினா். அங்கு கோயில் கட்டவும் அவா்கள் தீா்மானித்துள்ளனா். அச்சிலையை அங்காளபரமேஸ்வரியம்மன் எனக் கருதி அவா்கள் வழிபடத் தொடங்கியுள்ளனா்.