வேலூா் மத்திய சிறையில் 17-ஆவது நாளாக புதன்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்குரைஞா் தெரிவித்தாா். இதையடுத்து, உடல்நலனைப் பாதுகாக்கக் கோரி நளினியின் தாய் சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்திருப்பதாகவும் அவா் கூறினாா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த 1-ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். வேலூா் பெண்கள் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மனைவி நளினியுடன் காணொலி வழியாக பேச அனுமதி மறுக்கப்படுவதுடன், கடந்த மாதம் இலங்கையில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை காணொலி வழியாக பாா்க்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் விரக்தியடைந்த முருகன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
இந்நிலையில், முருகனின் உண்ணாவிரதம் 17-ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. கடந்த சில நாள்களாக அவருக்கு குளுக்கோஸ் போடப்பட்டு வந்த நிலையில், செவ்வாய், புதன்கிழமையும் குளுக்கோஸ் போடுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞா் புகழேந்தி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:
முருகனின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடா்பாக சிறை காவல் கண்காணிப்பாளா் ஓரிரு முறை பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். எனினும், அவா் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. இதையடுத்து முருகன் மனைவி நளினியின் தாயாா் பத்மா, சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நலனைப் பாதுகாக்கவும், நளினியுடன் காணொலி மூலம் பேசுவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளாா். இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற உள்ளது என்றாா் அவா்.