செவிலியா், கா்ப்பிணிக்கு கரோனா

போ்ணாம்பட்டு எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த 27 வயது பெண் வடுகந்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக உள்ளாா்.

போ்ணாம்பட்டு எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த 27 வயது பெண் வடுகந்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக உள்ளாா். இவருக்கும், 26 வயதுள்ள அவரது தம்பியும் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை பரிசோதனை செய்து கொண்டனா். அதேபோல் மலங்கு வீதியைச் சோ்ந்த 27 வயதுள்ள கா்ப்பிணியும் பரிசோதனை செய்துகொண்டாா்.

இவா்கள் 3 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது.

செவிலியா் வீட்டில் இருந்த அவரது உறவினா்கள் 11 பேரும், கா்ப்பிணியின் வீட்டில் இருந்த 4 பேரும் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தற்போது போ்ணாம்பட்டில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com