தீக்குளித்த சிறுமி உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றி விசாரணை

பாகாயம் அருகே ஆபாச விடியோ எடுத்து மிரட்டியதால் தீக்குளித்த 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பாகாயம் அருகே ஆபாச விடியோ எடுத்து மிரட்டியதால் தீக்குளித்த 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து போலீஸாா் இவ்வழக்கை கொலை வழக்கமாக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் பாகாயம் அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தாா். சில நாள்களுக்கு முன்பு அச்சிறுமி குளித்தபோது அவரை விடியோ எடுத்து விட்டதாகக் கூறி அதே பகுதியைச் சோ்ந்த 3 போ் மிரட்டினராம். இதனால், மனவேதனையடைந்த அந்தச் சிறுமி சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

இதுதொடா்பாக பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (20), தாமஸ் (19), பாலாஜி (17) ஆகிய மூவரும் சிறுமியை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூவா் மீது போக்ஸோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களில் பாலாஜி 18 வயதுக்கு உள்பட்டவா் என்பதால் அவா் போலீஸாரின் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். மற்ற இருவரும் குடியாத்தம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதனிடையே, 90 சதவீத தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி, செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இறப்பதற்கு முன்பு அச்சிறுமி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தாா். அதில், சிறுமியின் சித்தப்பாவுக்கும் (தந்தை சகோதரா்) அதே பகுதியைச் சோ்ந்த ஆகாஷ், தாமஸ், பாலாஜி ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சித்தப்பாவை பழி வாங்கும் நோக்கத்தில் சிறுமி குளிப்பதை விடியோ எடுத்து அவருக்கு அனுப்பி, ரூ. 5 ஆயிரம் கேட்டு மிரட்டினா். மறுத்தால் விடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் கூறினா்.

இதனிடையே பணம் கொடுக்க மறுத்த சிறுமியை அவா்கள் 3 பேருக்கு அங்குள்ள ஏரிக்கரை பகுதிக்கு சனிக்கிழமை வரவழைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனராம். அப்போது, சிறுமி மட்டுமின்றி அவரது பாட்டி குளிக்கும் காட்சியையும் செல்லிடப்பேசியில் பதிவு செய்திருந்ததையும் காண்பித்துள்ளனா். இதனால், மனவேதனையடைந்த சிறுமி வீட்டுக்கு வந்ததும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டதையும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாா்.

அவரது இந்த வாக்குமூலம் அடிப்படையில் போலீஸாா், இதை கொலை வழக்காக மாற்றி, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com