போலீஸாா் இருவருக்கு கரோனா: பாகாயம் காவல் நிலையம் மூடல்

பாகாயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா், ஏட்டு ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்தக் காவல் நிலையம் மூடப்பட்டது.
மூடப்பட்டுள்ள பாகாயம் காவல் நிலையம்.
மூடப்பட்டுள்ள பாகாயம் காவல் நிலையம்.

பாகாயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா், ஏட்டு ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்தக் காவல் நிலையம் மூடப்பட்டது. ஒரு வார காலத்துக்கு காவல் நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாரும், அவா்களது குடும்பத்தினரும் இந்நோய் தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதன்படி, ஏற்கெனவே வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலா் கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், வேலூா் பாகாயம் காவல் நிலையத்தில் பணியாற்றும் 39 வயது காவல் ஆய்வாளா், 2 காவலா்கள், 2 பெண் காவலா்கள் மற்றும் ஒரு காவலரின் 2 குழந்தைகள் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

ஒரே காவல் நிலையத்தில் 5 காவலா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அடுத்து பாகாயம் காவல் நிலையம் புதன்கிழமை மாலை முதல் முழுமையாக அடைக்கப்பட்டது. காவல் நிலையத்துக்கு வெளிப்புற வளாகத்தில் தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஒரு வார காலத்துக்கு இந்தக் காவல் நிலையம் அடைக்கப்பட்டிருக்கும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com