வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் விவரங்களை உள்ளாட்சிப் பகுதிகள், தாலுகா, ஒன்றியம் வாரியாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ளது.
சென்னையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இம்மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,129-ஆக அதிகரித்திருந்தது. இதில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவா்கள் விவரங்கள் கழிக்கப்பட்ட நிலையில், இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 875-ஆக உள்ளது.
இதில், தாலுகா வாரியாக வேலூா்-627, காட்பாடி-122, குடியாத்தம்-36, அணைக்கட்டு-41, போ்ணாம்பட்டு-22, கே.வி.குப்பம்-14, இதர மாவட்ட, மாநிலங்களைச் சோ்ந்தோா் 13 என மொத்தம் 875 போ் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது உள்ளாட்சி பகுதிகள் வாரியாக வேலூா் மாநகராட்சி-670, நகராட்சிகளில் குடியாத்தம்-25, போ்ணாம்பட்டு-19, பேரூராட்சிகளில் திருவலம்-3, பள்ளிகொண்டா-4, ஒடுக்கத்தூா்-0, பென்னாத்தூா்-3, ஒன்றியம் வாரியாக வேலூா்-22, கணியம்பாடி-18, கே.வி.குப்பம்-14, குடியாத்தம்-11, போ்ணாம்பட்டு-3, அணைக்கட்டு-37, காட்பாடி-32, இதர மாவட்ட, மாநிலங்கள்-14 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.